
தினசரி நாம் ஏற்படுத்திக்கொள்ளும் எண்ணங்களின் மூலம், நமக்கான விதியை நாமே உருவாக்குகிறோம்.

வெற்றி பெறுவதற்கான திறன் நமக்கு இருக்கிறது என்ற தன்னம்பிக்கையே, நமது லட்சியத்தை அடைவதற்கு தேவையான முக்கிய காரணியாகும்.

ஹார்ட்ஃபுல்னெஸ் தியானத்தில், மனதை ஒழுங்குபடுத்துவதற்கு இதயத்தை பயன்படுத்துகிறோம்.

நமது புலன்களை சிறந்த முறையில் பயன்படுத்துவதே விவேகமாகும் - அதாவது குறைந்த உள்ளீட்டில் அதிக பலனை பெறுதல்.

திட சித்தத்துடன், சரியான வழிமுறையும் மற்றும் வழிகாட்டுதலுமே, பூரண வெற்றிக்கு தேவையானவையாகும்.

தியானப் பயிற்சியை இன்னும் ஆழப்படுத்தவும், அதனை உயிரோட்டம் உடையதாக ஆக்கவும் எனக்கு உதவிய மிக முக்கியமான மனப்பான்மை 'தன்னியக்கம்' ஆகும். தன்னியக்கத்தில் இரண்டு அம்சங்கள் உள்ளன. எந்த தருணத்திலும், தியான நிலையை மீண்டும் நினைவுகூர்ந்து அந்நிலையை அமைத்துக் கொள்ள கற்றுக்கொள்வது முதல் அம்சமாகும். இரண்டாவது அம்சம், எதையும் குறித்த நேரத்தில் செய்வது, இதன் மூலம் நமது பயிற்சியில் ஓர் உயிரியல் கடிகாரத்தை நிறுவுகிறோம்.

உங்களது உணர்வுறுநிலையை, உங்களையே பார்த்துக்கொள்வதற்கு ஏற்றதொரு கண்ணாடியாக மாற்றுவதுதான் தியானத்தின் முழு பயனாகும்.

ஆன்மாவும் உடலும் இல்லாதிருந்தால், மனம் என்பதே அங்கு இருக்காது. அவற்றின் இணைவால் மட்டுமே அதன் இருப்பு வெளிப்படுகின்றது.

தியானத்தின் மூலமாக மனதின் சிக்கலிலிருந்து இதயத்தின் எளிமையை நோக்கிச் செல்கிறோம்.

நமது விதியை வடிவமைத்துக் கொள்ள ஒவ்வொரு நாளும் ஒரு பொன்னான வாய்ப்பாகும்.

குழந்தைகள் நிலைக்கண்ணாடியை போன்றவர்கள், ஏனெனில் நாம் எவ்வளவுதான் மறைக்க முயற்சித்தாலும் உண்மையினை உணர்ந்து கொள்ளும் தனித்துவமான திறன் குழந்தைகளுக்கு உண்டு.

மனம், நோக்கமின்றி அலைபாய்ந்து தடுமாறும்போது, நமது லட்சியத்தில் கவனம் இழக்கிறோம்.

தொடர்ச்சியான முன்னேற்ற செயல்முறையின் மூலம், நமது பலவீனங்களை சரிசெய்துகொண்டு நாம் வளர, விமர்சனங்கள் உதவுகின்றன.

நமக்கு தேவையான அனைத்தும், ஒளியின் மூல ஆதாரமாக நம் இதயத்தில் ஏற்கனவே உள்ளது.

அன்பை பற்றி சிந்திப்பது தியானமல்ல, அன்பை உணர்வதே தியானமாகும்.

நாம் மேற்கொள்ளும் பயிற்சியினால், உள்முக அமைதியும், லகுத்தன்மையும் இயல்பாக கிடைக்கப்பெற்றால், நமது ஆன்மீகப் பயிற்சி திறன்மிக்கதாகும்.

இதயத்தில் அமைதி இருந்தால்தான், அதனை வெளியில் உருவாக்க முடியும்.

நமக்கு தேவையான அனைத்தும் ஏற்கனவே நம்முள் இருக்கின்றது.

மிதத்தன்மையை வளர்த்துக்கொள்வதற்கு, நமது உள்முக மற்றும் வெளிப்புற வாழ்க்கை முறை, இவை இரண்டிலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

பிடிவாதத்தை நீக்கி, வளைந்து கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். பிறகு ஆன்மீகத்தில் உங்களால் எவ்வளவு விரைவாக முன்னேற முடியும் என்பதை பாருங்கள்.

அன்பிற்குரியவரோடு நீங்கள் இருக்கும்போது, நீங்கள் வெற்றிபெற்றாலும் தோல்வியுற்றாலும், அது ஒரு பொருட்டே அல்ல.

ஜீவிதத்தை வெளிப்படுத்துவதே செயலின் நோக்கமாகும். எந்த உயிருக்கும் தீங்கிழைக்காமல் இயல்பான முறையில் ஜீவிதம் அதனையே வெளிப்படுத்திக் கொண்டால், அங்கு பாவ புண்ணியத்திற்கு இடமில்லை.

பிரார்த்தனையால் உருவாகும் பேரார்வமும் ஏக்கமும், ஆழமான தியானத்தில் தானாக தெளிவு பெறுகிறது.